விராத் போர்கப்பலில் ராஜிவ் காந்தி உடன் சென்றது உண்மைதான் - ராகுல் காந்தி ஒப்புதல்

நாட்டின் பாதுகாப்புக்கான ஐஎன்எஸ் விராத் போர்கப்பலை பயன்படுத்தி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றதாக பிரதமர் மோடி சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.
விராத் போர்கப்பலில் ராஜிவ் காந்தி உடன் சென்றது உண்மைதான் - ராகுல் காந்தி ஒப்புதல்
x
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தந்தை ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது அவருடன் ஐஎன்எஸ் விராத் போர் கப்பலில் சென்றது உண்மை தான் என்றும் ஆனால் அது  உல்லாச சுற்றுலா அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உல்லாச சுற்றுலா என்ற குற்றச்சாட்டு வியப்பளிப்பதாக கூறிய அவர் விமானம் தாங்கிய போர்க்கப்பலில் யாராவது உல்லாச சுற்றலா செல்வார்களா என்றும் சுற்றுலா செல்வதற்கு அது என்ன சொகுசு கப்பலா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்