பேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை
புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மூலக்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான பேக்கரிக்கு நேற்றிரவு புகுந்த மர்மநபர்கள், சிசிடிவி கேமிரா பதிவு செய்யும் ஹார்டு டிஸ்கையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story