ரஃபேல் பற்றி ராகுல் கூறிய கருத்து நீதிமன்ற அவமதிப்பு ஆகும் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார்

ரபேல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து பார்க்காமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஃபேல் பற்றி ராகுல் கூறிய கருத்து நீதிமன்ற அவமதிப்பு ஆகும் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார்
x
ரபேல் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும், அந்த ஆணவங்களை பரிசீலனைக்கு ஏற்கலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து பார்க்காமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக அர்த்தம் கற்பிக்க முனைவதாகவும் ராகுல் மீது அவர் புகார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்