பல துறைகளில் சாதித்த பெண்களுக்கு நாரி புரஸ்கார் விருது...

பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு, 2018 ஆம் ஆண்டுக்கான நாரி புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
பல துறைகளில் சாதித்த பெண்களுக்கு நாரி புரஸ்கார் விருது...
x
ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில், 44 பெண்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார். தனிநபர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மினி வாசுதேவனுக்கு விருது வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த இவர், கைவிடப்பட்டு தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு ஆதரவளித்து அவற்றுக்கு  சேவை ஆற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு சிறப்பான சேவை ஆற்றியதற்காக தமிழக அரசின் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து உணவுத் திட்ட துறைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்