நாடாளுமன்ற குழு முன் 'சிஇஓ' ஆஜராக மாட்டார் : ட்விட்டர் நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி அறிவிப்பு

இந்திய நாடாளுமன்ற குழு முன்பாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே ஆஜராக மாட்டார் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
நாடாளுமன்ற குழு முன் சிஇஓ ஆஜராக மாட்டார் : ட்விட்டர் நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி அறிவிப்பு
x
இந்திய நாடாளுமன்ற குழு முன்பாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே ஆஜராக மாட்டார் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.  ட்விட்டர் தளத்தில் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்வதற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க,  வரும் 25 ஆம் தேதிக்குள் நாடாளுமன்ற குழு  முன்பாக, டோர்சே நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ட்விட்டர்  நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  டோர்சேவுக்கு பதிலாக நிறுவனத்தின் தலைமை பொதுக் கொள்கை அதிகாரி கொலின் குரோவெல் கலந்து கொள்வார் என்று கூறியுள்ளது. முன்னதாக பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் இளநிலை அதிகாரிகள் கலந்து கொண்டதால், தலைமைச் செயல் அதிகாரி கலந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற குழு வலியுறுத்தியது.



Next Story

மேலும் செய்திகள்