காகங்களுடன் முதலமைச்சரை ஒப்பிட்டதாக எழுந்த புகார் - தவறாக சித்தரித்தால் நான் பொறுப்பல்ல : கிரண்பேடி

ஆளுநர் மாளிகை முழுவதும் காகங்கள் நிறைந்துள்ளன என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்ததற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
காகங்களுடன் முதலமைச்சரை ஒப்பிட்டதாக எழுந்த புகார் - தவறாக சித்தரித்தால் நான் பொறுப்பல்ல : கிரண்பேடி
x
ஆளுநர் மாளிகை முழுவதும் காகங்கள் நிறைந்துள்ளன என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்ததற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. முதலமைச்சரை ஒப்பிட்டு தான் ஆளுநர் கருத்து கூறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஆளுநர் கிரண்பேடி மறுத்துள்ளார்.  கல்வித்துறையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தன் மாளிகையில் ஏராளமான காகங்கள் இருப்பதாகவும், அது தன்னோடு அன்பாக விளையாடுவதாக கூறினார்.  இது தொடர்பான தமது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு தாம் பொறுப்பல்ல என்றும் கிரண்பேடி விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்