புல்வாமா தாக்குதல் எதிரொலி - பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்

தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் எதிரொலி - பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
x
மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கானி பாட், பிலால் லோன், ஹசிம் குரோஷி மற்றும் ஷபிர் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு இன்று மாலைக்குள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களும் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்