கொல்கத்தா : சி.பி.ஐ.இணை இயக்குநரை கைது செய்ய போலீஸ் திட்டம்
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகளை மேற்குவங்க மாநில போலீசார் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகளை மேற்குவங்க மாநில போலீசார் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாரதா சிட்பண்ட் மற்றும் நிதி திட்ட முறைகேடு ஆதாரங்கள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்றது. அதற்கு அனுமதி அளிக்காத மாநில போலீசார், அவர்களை சிறைபிடித்து, பின்னர் விடுவித்தனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டி.ஜி.பி. மற்றும் மாநகர மேயர் ஆகியோர், மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரின் வீட்டுக்கு சென்று, ஆதரவு தெரிவித்ததால் பதற்றம் பற்றிகொண்டது.
Next Story