"எம்.எல்.ஏவை பார்த்ததேயில்லை" - பெண் குற்றச்சாட்டு : மைக்கை பறித்து மிரட்டிய சித்தராமையா

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கேள்வி எழுப்பிய பெண் ஒருவரை ஆக்ரோஷமாக அதட்டி உட்கார வைத்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏவை பார்த்ததேயில்லை - பெண் குற்றச்சாட்டு : மைக்கை பறித்து மிரட்டிய சித்தராமையா
x
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கேள்வி எழுப்பிய பெண் ஒருவரை ஆக்ரோஷமாக அதட்டி உட்கார வைத்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தராமையாவின் மகன் யஷீந்திராவின் தொகுதியான வருணா பகுதியில் மின்சார வாரிய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அங்கு மக்களை சந்தித்த சித்தராமையா, குறைகளை கேட்டார். அப்போது, இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. அதாவது சித்தராமையாவின் மகனை தேர்தலின் போது பார்த்ததாக பெண் ஒருவர் கூறினார். இதனால், கோபமடைந்த சித்தராமையா, அந்தப் பெண்ணிடம் இருந்த மைக்கை, ஆவேசத்துடன் பறித்து அதட்டி உட்கார வைத்தார். இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்