கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை : நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்த அவலம்

உத்திரபிரதேசத்தில், நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க மருத்துவமனை மறுத்ததால், நடுரோட்டில் அவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை : நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்த அவலம்
x
உத்திரபிரதேசத்தில், நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க மருத்துவமனை மறுத்ததால், நடுரோட்டில் அவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ஜலாஉன் மாவட்டத்தில், நிறை மாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரை அனுமதிக்க மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த அவருக்கு திடீரென்று நடுரோட்டில் குழந்தை பிறந்தது.  அங்கிருந்த பெண்கள் தங்கள் உடைகளை திரையாக மாற்றி, அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணிண் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்