மதமாற்ற தடைச்சட்டம் - ராஜ்நாத் சிங் கருத்து

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை சமூகத்தினர் மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருவதாகவும், இங்கு பெரும்பான்மை சமூகம் அதே கோரிக்கையை வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மதமாற்ற தடைச்சட்டம் - ராஜ்நாத் சிங் கருத்து
x
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை சமூகத்தினர் மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருவதாகவும், இங்கு பெரும்பான்மை சமூகம் அதே கோரிக்கையை வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தாங்களாக ஒரு மதத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும், பெருவாரியாக மதமாற்றத்தில் ஈடுபடுவது எந்த ஒரு நாட்டிற்கும் முக்கியமான பிரச்சனை தான் என தெரிவித்துள்ளார். இந்துக்கள் இந்துக்களாகவும், இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்க வேண்டியது தானே என்றும், ஏன் ஒட்டு மொத்தமாக உலகத்தையே மாற்ற நினைக்கிறீர்கள் என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்