முத்ரா கடன் பெற்றவர்களில் பெண்கள் 75 % - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல்

சிறு தொழில் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் 75 சதவீதம் பெண் தொழில்முனைவோர்கள் கடன் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
முத்ரா கடன் பெற்றவர்களில் பெண்கள் 75 % - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல்
x
சிறு தொழில் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் மு​த்ரா கடன் வழங்கும் திட்டத்தில்  75 சதவீதம் பெண் தொழில்முனைவோர்கள் கடன் பெற்றுள்ளதாக  மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் பேசிய அவர்,  இத்திட்டத்தி​ல் இதுவரை 14 கோடி  பேர்  கடன் பெற்று உள்ளதாகவும், இதில் 75 சதவீதம் பேர் பெண்கள் என்றும், குறிப்பிட்டார். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். பெண்கள் முறைப்படுத்தப்பட்ட துறைக்குள் வருவது அதிகரித்து உள்ளதாகவும் கூறினார். இந்த திட்டம் மூலம் 10 லட்ச ரூபாய் வரை  சிறு தொழில்களுக்கு கடன் அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்