'ஆம்புலன்ஸ்' போக, அரும்பாடுபட்ட காவலர்...
ஆம்புலன்ஸ் செல்ல, ஓடி ஓடி வழி ஏற்படுத்திய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஆம்புலன்ஸ் செல்ல, ஓடி ஓடி வழி ஏற்படுத்திய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கேரளாவின் கோட்டையம் பகுதியில் காவலர் ரஞ்சித் குமார் நாதாகிருஷ்ணன் என்ற காவலர் செய்த இந்த பணி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில், ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அங்கிருந்த காவலர் ஒருவர், சாலையின் நடுவில் நின்ற வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்தைச் சரி செய்து ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் ஓடி ஓடி வழி ஏற்படுத்தும் காட்சிகளை ஆம்புலன்ஸில் உள்ளவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Next Story