இந்திய ராணுவ உடையில் நுழைந்த தீவிரவாதிகள்: தாக்குதல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்

இந்திய ராணுவ உடையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ உடையில் நுழைந்த தீவிரவாதிகள்: தாக்குதல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவுகமில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில், இந்திய ராணுவ உடையில் சிலர் ஊடுருவியுள்ளனர். பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அவர்கள் ஏராளமான ஆயுதங்களை கொண்டு வந்ததாகவும், அவற்றில் பாகிஸ்தான் என எழுதப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் சிலர், இந்திய எல்லை பாதுகாப்பு படையின் சீருடையையும் சிலர் இந்திய ராணுவத்தின் சீருடையையும் அணிந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவக் குறித்து தகவல் அறிந்து நவுகாம் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தீவிர தேடுதல்  வேட்டை நடத்தப்பட்டதாகவும் அப்போது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு போர் நடத்தும் அளவிற்கு தேவைப்படும் ஆயுதங்களை தீவிரவாதிகள் கொண்டு வந்திருந்ததாகவும்,  தீவிரவாதிகளை அனுப்பியது பாகிஸ்தான் தான் எனவும் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்