சபரிமலை நிலை குறித்து மூவர் குழு ஆய்வு : நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்

சபரிமலையின் நிலை குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
சபரிமலை நிலை குறித்து மூவர் குழு ஆய்வு : நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்
x
 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, கோயில் சன்னதியில் அசாதாரண சூழல் நிலவுவதை தவிர்ப்பதற்காக அங்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை நிலை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராமன், ஸ்ரீஜெகன் மற்றும் ஹேமச்சந்திரன் என்ற மூவர் குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்திருந்தது. இதன்படி, இன்று அந்த குழுவினர், அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்ப​டையில் கேரள அரசு  உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




Next Story

மேலும் செய்திகள்