காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியரை மரத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள் அடித்துள்ளனர்.
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்
x
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பங்காருபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர் மாணவி பல்லவி. அதே பள்ளியில் பணிபுரியும் இந்தி ஆசிரியர் சங்கர், மாணவி பல்லவியிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டிற்கு சென்ற சங்கர், தன்னை காதலிக்க மறுத்து வரும் பல்லவியின் கழுத்தை  அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சங்கரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் தகவல் கிடைத்து வந்த போலீசார் மாணவியையும், ஆசிரியரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்