7 பேர் விடுதலை : "இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்" - ராஜபக்சே கருத்து

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
7 பேர் விடுதலை : இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் - ராஜபக்சே கருத்து
x
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றார். புதன்கிழமையன்று சுப்பிரமணி சுவாமியின் நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே பங்கேற்கிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் ராஜபக்சே சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அமைச்சரவை தீர்மானம் குறித்து ராஜபக்சேயிடம் கேட்டபோது, 7 பேரை விடுதலை செய்வது இந்திய அரசின் கையில் உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்