அடுத்த மோதல் ஆரம்பம்...
புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே அதிகாரம் தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரம் குறித்து, அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின்னர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதன்படி செயல்பட வேண்டும் என, முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று காலை உசுட்டேரி பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற கிரண்பேடியுடன், அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என தெரிவித்தார். இதனால் மீண்டும் துணை நிலை ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.