மத்திய பிரதேசத்தில் விடுமுறை எடுத்ததற்கு கொடூர தண்டனை

ஊழியரை கட்டி வைத்து அடித்த உரிமையாளர்
மத்திய பிரதேசத்தில் விடுமுறை எடுத்ததற்கு கொடூர தண்டனை
x
மத்திய பிரதேசத்தில்  முன் அறிவிப்பின்றி விடுமுறை எடுத்த ஊழியரை, பெட்ரோல் பங்க் உரிமையாளர் கட்டி வைத்து தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஹோஸங்காபாத் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் ராய்ப்பூர் கிராமத்தை சேர்ந்த அஜய் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.  கடந்த ஆறு நாட்கள் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை எடுத்துள்ளார். இந்நிலையில், சொல்லாமல் விடுமுறை எடுத்த அஜய்யை அழைத்து வந்து, கயிற்றில் கட்டி, சாட்டையில் உரிமையாளர் தாக்கியது மட்டும் இல்லாமல், அதனை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அஜய் அளித்த புகாரின் பேரில் பெட்ரோல் பங்கின் உரிமையாளார் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்