நாகப் பாம்புடன் பள்ளிக்கு சென்ற மாணவி

ஓசூரில் பள்ளி மாணவி ஒருவர் நாகப் பாம்புடன் பள்ளிக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப் பாம்புடன் பள்ளிக்கு சென்ற மாணவி
x
நாகப் பாம்புடன் பள்ளிக்கு சென்ற மாணவி

ஓசூரில் பள்ளி மாணவி ஒருவர் நாகப் பாம்புடன் பள்ளிக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காமராஜ் நகரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவி விடுமுறை முடிந்து இன்று  வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். 
அப்போது  பாடவேளையில் மாணவி புத்தக பையை திறந்தபோது அதில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.  இதனைக் கண்ட பள்ளி மாணவ மாணவியர்கள் அலறியடித்தபடி வகுப்பறையிலிருந்து வெளியே ஓடினர். தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் புத்தக பையை மைதானத்திற்கு எடுத்து சென்று நாகப்பாம்பினை அடித்து கொன்றனர். 



Next Story

மேலும் செய்திகள்