கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு சலுகை
கல்விக்கடன் தீர்வுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சென்னையில் நடைபெற்றது. இதன் மூலம் கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு நிலுவைத்தொகையில் சலுகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக கல்விக்கடன் தீர்வுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சென்னையில் நடைபெற்றது.
இதன் மூலம் கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு நிலுவைத்தொகையில் சலுகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் தந்தி டி.வி.க்கு பேட்டியளித்த குழுவின் செயலாளர் நீதிபதி ஜெயந்தி , வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் குறைந்த கடன் தொகையை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.
மாணவர்கள் முதுநிலை கல்வி பயிலவும் வங்கியில் கடன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
Next Story