கமென்ட்டுகளால் காண்டன இயக்குனர்..! ஃபேஸ்புக், யூடியூப் மீது வழக்குப்பதிவு

x

கேரளாவில், தனது திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டதாக இயக்குநர் அளித்த புகாரின்பேரில், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Vovt

கேரளாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் இ.உபாய்னி இயக்கிய 'ரகேல் மகன் கோரா' என்ற படம், கடந்த 13-ம் தேதி வெளியானது. இதுகுறித்து சிலர் முகநூல், யூடியூப்பில் எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் உபாய்னி புகார் அளித்தார். அதில், மோசமான விமர்சனங்களால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தவறான விமர்சனங்கள் அளிக்க முகநூல் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் இடமளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு சினிமா விளம்பர நிறுவனம் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, சினிமா விளம்பர நிறுவன உரிமையாளர், முகநூல் மற்றும் யூடியூப் மீது மூன்று பிரிவுகளில், 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்