"மௌனம் பேசியதே" வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு

x

இயக்குநர் அமீரின் முதல் திரைப்படமான "மவுனம் பேசியதே" வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்...

நடிகர் சூர்யா - நடிகை த்ரிஷா நடித்து வெளியான அமீரின் முதல் படம் மவுனம் பேசியதே... யுவன் சங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் இன்னும் நூறாண்டு கடந்தும் நினைவுகூரப்படும்... வழக்கமாக திரைப்படங்களில் காட்டப்படும் ஆண்களைப் போல் பெண்கள் என்றாலே உருகும் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் சூர்யாவுடையது வேறு ரகம்... "காதல் - கசப்பு" என்று வெறுத்து ஒதுக்கி வாழும் சூர்யாவின் வாழ்க்கையை காதல் படுத்தும் பாடு தான் கதை... சூர்யா பேசுவது குறைவுதான்... ஆனால் படத்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமானதாக இருக்கும்... யாருக்கும் தெரியாமல் படம் முழுக்க பயணித்திருக்கும் லைலாவின் சொல்லப்படாத காதல் இறுதியில் பேசுவது தான் மவுனம் பேசியதே...


Next Story

மேலும் செய்திகள்