நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது

அவதூறு வழக்கில் முறையாக ஆஜராகாத நடிகை மீரா மிதுன், நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
x
அவதூறு வழக்கில் முறையாக ஆஜராகாத நடிகை மீரா மிதுன், நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை மீரா மிதுன் மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக்கை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்