இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் "சினம்கொள்"

இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் "சினம்கொள்" திரைப்படம் வரும் 14 ஆம் தேதி ஈழம் ப்ளே(Eelam play ) என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் சினம்கொள்
x
இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் "சினம்கொள்" திரைப்படம் வரும் 14 ஆம் தேதி ஈழம் ப்ளே(Eelam play ) என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆண்டவன் கட்டளை, மிக  மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் அவருடன் நர்வினி டெய்சி, லீலாவதி, உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ரஞ்சித் ஜோசப், இலங்கையில் படப்பிடிப்பின் போது பல்வேறு இடர்பாடுகளை சந்தித்ததாகவும், ஈழ மக்களின் இன்றைய வாழ்வியலை இப்படம் பேசும் எனவும் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்