நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி நித்யா புகார் : காவல்நிலையத்தில் தாடி பாலாஜி ஆஜர்

சென்னை மாதவரம் காவல்நிலையத்தில் மனைவி நித்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் தாடி பாலாஜி, நேரில் ஆஜரானார்.
நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி நித்யா புகார் : காவல்நிலையத்தில் தாடி பாலாஜி ஆஜர்
x
சென்னை மாதவரம் காவல்நிலையத்தில் மனைவி நித்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் தாடி பாலாஜி, நேரில் ஆஜரானார். சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் கடந்த 20 ம் தேதி  தாடி பாலாஜியின் மனைவி நித்யா புகார் அளித்துள்ளார்.   தாடி பாலாஜி மது அருந்தி விட்டு, தகராறு செய்வதாகவும், தம்மையும் தமது மகள் போஷிகாவையும் தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

நித்யாவின் புகாருக்கு விளக்கம் அளிக்க தாடி பாலாஜி இன்று மாதவரம் காவல்நிலையத்தில் ஆஜரானார். விசாரணையில்  மனைவி நித்யா கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது என்றும் எந்த ரவுடிகளையும் வைத்து மிரட்டவில்லை என்றும், அவர் கூறினார். மேலும் இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், அந்த தீர்ப்புக்கு முழுவதுமாக கட்டுப்பட்டு சம்மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்