அடுத்த படத்திற்கு தயாரான ஜோதிகா

'36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்த நடிகை ஜோதிகா தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக வெற்றிப்படங்களை அளித்து வருகிறார்.
அடுத்த படத்திற்கு தயாரான ஜோதிகா
x
கடந்த ஆண்டு ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி', 'செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ஜோதிகாவின் புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார். எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் யோகிபாபு, ஆனந்த்பாபு, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும், வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தப் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்