சர்கார் படத்தில் அரசு திட்டங்கள் விமர்சனம் : முருகதாஸ் முன் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சர்கார் படத்தில் அரசு திட்டங்கள் விமர்சனம் : முருகதாஸ் முன் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
x
விஜய் நடித்த, 'சர்கார்' படத்தில் தமிழக அரசையும், இலவச திட்டங்களையும் விமர்சிக்கும் காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு தாக்கல் செய்தார். அவரை, நவம்பர் 27 வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில், வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, 'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை அமைக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, முருகதாசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டதால், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்