தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கிடைக்குமா..? - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...

x

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கும் உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் 5-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ளதால், மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்