திடீர் அரசியல் `மேடை' - தேர்தலில் போட்டியிடுகிறாரா வடிவேலு?

x

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவதாக வெளியான தகவல்களுக்கு நடிகர் வடிவேலு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த வடிவேலு, அதன் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். 2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அமைச்சர் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்த பிறகு அவருடன் நெருக்கமாகி, அவ்வப்போது தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், மெரினாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட வடிவேலு, அதைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற முதல்வரின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வடிவேலு போட்டியிட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தாம் சென்னையில் தங்கியிருந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்டதாலும், தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் பேசியதாலும் தன்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள் என்றும் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்