சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்... 39 தொகுதிகளில் களமிறங்கும் அரசு ஊழியர்கள்

x

மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் தேர்தலில் அரசுக்கு எதிரான நிலைபாட்டை வெளிப்படுத்துவோம் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்