இன்று வெளியாகும் தேர்தல் அறிவிப்பு.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி திடீர் கடிதம்

x

மக்களின் ஆதரவே, தனக்கு துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கு வலிமையைத் தருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு, சனிக்கிழமை வெளியிடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், 140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் தம்மை ஊக்கப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மாற்றமே, தங்கள் அரசின் மிகப்பெரும் சாதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன் மீது நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் ஆதரவால் ஜிஎஸ்டி அமலாக்கம், 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் ஒழிப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடம் என வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் ஆதரவே, மிகப்பெரும் முடிவுகளை எடுக்க தமக்கு வலிமையை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற நாம் பணியாற்ற வேண்டி இருப்பதால் மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஆதரவையும் எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்