திடீரென 2 மாநிலங்களில் ஜூன் 4லிருந்து ஜூன் 2-க்கு மாறிய தேர்தல் ரிசல்ட்

x

#electioncommission #electiondate

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும், சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் சூழ்நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடும் தேதியில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்