"இந்தியா கூட்டணி" - மனம் திறந்த பிரதமர் மோடி

x

ஒடிசா மாநிலம் சண்டிகோலில் 19 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், ஜாஜ்பூர் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்கிற இலக்கு, இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றும் என்று கூறினார். அந்த இலக்கானது, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆட்தேர்விலும் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியால் இளைஞர்களுக்கு எவ்வாறு வேலை வாய்ப்பை வழங்க முடியும் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். 2014-ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த கவனமும் தங்களின் கஜானாவை நிரப்புவதிலேயே இருந்ததாகவும் அவர் கூறினார். குடும்பமே முதன்மை என்பது தான் இந்தியா கூட்டணியின் சித்தாந்தம் என்றும், மாறாக தேசமே முதன்மை என்பதுதான் இந்த மோடியின் சித்தாந்தம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்