2024 தேர்தல்.. முதல்வரின் வார்த்தைகள்.. திமுகவினருக்கு எகிறிய பூஸ்ட்

x

2024 தேர்தல்.. முதல்வரின் வார்த்தைகள்.. திமுகவினருக்கு எகிறிய பூஸ்ட்

நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற்ற கூட்டங்கள் பெரும் வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை...அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும் - நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர், அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்