திடீரென தீப்பிடித்த விமானம்.. குபு குபுவென கிளம்பிய புகை - சிங்கப்பூரில் அவசரமாக தரையிறக்கம்

x

ஏர் சீனா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால் விமானம் அவசரவசரமாக சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டது... மொத்தம் 155 பேருடன் ஏர் சீனாவின் விமானம் ஒன்று சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், திடீரென எஞ்சினில் ஏற்பட்ட தீவிபத்தால் உடனடியாக சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டது... உடனடியாக பயணிகள் கீழிறக்கப்பட்டனர். பயணிகள் வெளியேற்றப்படும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 9 பேர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் எஞ்சினில் பற்றிய தீ அணைக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்