முக்கிய நகரத்தை சூறையாடிய ஓடிஸ் புயல்... பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு | Mexico

x

மெக்சிகோவின் கடற்கரை நகரமான அகாபுல்கோவை கடந்த 5 தினங்களுக்கு முன் ஓடிஸ் புயல் தாக்கியது. இதில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 35 வீடுகள் 80 சதவீதம் சேதம் அடைந்தது. புயல் தாக்கிய பகுதியில், தொலைதொடர்பு, மின்சார சேவை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் அகாபுல்கோ நகர மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல் குடிநீர், உணவு பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புயல் பாதித்த இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்