ரெட் கிராஸ் ஆம்புலன்ஸை குறிவைத்து தாக்குதல்... எல்லைமீறிய இஸ்ரேல்; அதிர்ச்சியில் உலகம்

x

இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டு வருகிறது... இந்த சூழலில் பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்தி மீது இஸ்ரேல் படைகள் நேரடி தாக்குதலை நடத்தியுள்ளன... இதில் அவ்வமைப்பைச் சேர்ந்த மருத்துவ பணியாளர் முகமது அல் ஒமாரி கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயம் அடைந்த மக்களை ஒமாரி அஹில் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் மேலும் 2 மருத்துவ பணியாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் மீட்புப் பணியாளர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்