தொட்டி கட்டுவதில் முறைகேடு?ஊராட்சி மன்றத் தலைவர் மிரட்டும் ஆடியோ வைரல்

x

தென்காசி அருகே, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை, ஊராட்சி மன்றத் தலைவர் தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவுடையனூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் குத்தாலிங்க ராஜன் என்கிற கோபி... இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முருகன் என்பவர் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த குத்தாலிங்க ராஜன், முருகனை தொலைபேசி தொடர்புகொண்டு மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனினும், மேல்நிலை நீர் தேக்க தொட்டிப் பணி முறைப்படிதான் நடப்பதாக குத்தாலிங்க ராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்