கேரளாவில் கோழிகளை அழிக்கும் பணி ஆரம்பம்.. இறைச்சி, முட்டை வாங்க தடை
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பண்ணையில், வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்து வந்தன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் அவற்றின் இறைச்சி, முட்டைகளை உண்ணவும் விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Next Story