சரிந்து விழுந்த 400 டன் தொட்டி..! பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு - விஜயபுராவில் சோகம்

x

கர்நாடகாவில் சேமிப்புக்கிடங்கில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் உள்ள உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையின் சேமிப்புக்கிடங்கில் மக்காச்சோள சேகரிப்பு தொட்டி திடீரென சரிந்தது. சுமார் 400 டன் அளவிலான மக்காச்சோளங்கள் இருந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் தலா 5 லட்சம் ரூபாயும், கர்நாடக அரசுத் தரப்பில் 2 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்