அச்சு முறிந்து கவிழ்ந்த தேர் - இருவர் பலி

பென்னாகரம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
x

தர்மபுரி மாவட்டம்பாப்பாரப்பட்டி அருகேயுள்ள மாதேஅள்ளி காளியம்மன் கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றுள்ளது. அப்போது தேர் நிலை சேர்வதற்கு சற்று முன்பு அச்சு முறிந்து தேர் முன்பக்கமாக கவிழ்ந்தது. எதிர்பாராதவிதமாக தேர் சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தேர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்