போஸ்டர்கள் பற்ற வைத்த காட்டுத்தீ.. அனலாய் தகிக்கும் அரசியல் களம் - "இன்னைக்கு எங்க இது நடந்துச்சு"

x

தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளில் திமுக எம்.பிக்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் பதவி வகித்து வரும் நிலையில், தங்களது தொகுதி எம்.பி காணவில்லை., கண்டா வரச்சொல்லுங்க என அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வேலூர் தொகுதி மக்கள் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர். இதேபோல குடியாத்தம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை திமுகவினர் அகற்றினர். வேலூர் நகர் பகுதிகளிலும் எம்.பியை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.மேலும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் எம்.பியை காணவில்லை, கண்டா வரச்சொல்லுங்க என தனுஷ் பட பாடல் வரிகளுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனை அகற்றிய விசிகவினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்