"குடிக்க தண்ணீ கிடைக்கல " - போராட்டத்தில் குதித்த பெண் கவுன்சிலர்

x

மேட்டுப்பாளையம் அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டி பெண் கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவை மாவட்டம், காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு,15-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக கவுன்சிலர் நித்யா போராட்டத்தில் ஈடுபட்டார். மங்களகரை புதூர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்