"சார் பீடி வேணும்.. என்ன பாக்குற.." போலீசாரிடம் பீடி கேட்டு அட்ராசிட்டி நக்கலாக மிரட்டிய கஞ்சா கைதி... தீயாய் பரவும் டீக்கடை வீடியோ

x

நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த மணி, கஞ்சா வழக்கில் நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அப்போது தமக்கு பசி எடுப்பதாய் கூறிய கைதியைக் கண்டு மனமிறங்கிய போலீசார் டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்தனர். சிறைக்கு செல்வதை ஏதோ விருது வாங்க செல்வதைப் போன்ற தோரணையில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி கடையில் பந்தா காட்டிக் கொண்டிருந்தார் கஞ்சா குற்றவாளி மணி. கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள் தப்பி ஓடினால் தங்களுகுத் தான் பிரச்சினை என்பதால், இதுபோல் ஒரு சில கைதிகள் செய்யும் காரியங்களை போலீசார் பொறுமையுடன் கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்... நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜர் படுத்தும் வரை போலீசார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்... இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி, காவலர்களிடமே புகைப்பதற்கு பீடி கேட்கும் இந்தக் கைதியின் நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்