"பஸ் இல்ல" அதிகாரிகளுடன் வாக்குவாதம்-சமரசத்திற்கு வந்த காவலரை டென்ஷன் ஆக்கிய நபர்-பரபரப்பு காட்சிகள்

x

வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து இல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரை காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்ல 2 மணி நேரத்திற்கும் மேலாக அரசு பேருந்துகள் இல்லாததால், பெண்கள், குழந்தைகள் உள்பட150 க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கும் சூழல் உருவானது. நீண்ட நேரமாக பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த மக்கள், போக்குவரத்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த புறக்காவல் நிலைய காவலர் விஜயகுமார், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பயணி ஒருவர், மதுபோதையில் காவலர் விஜயகுமாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அந்தப் பயணியை கன்னத்தில் தாக்கி சட்டையை கிழித்து விஜயகுமார் இழுத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்