முடிந்தது விடுமுறை.. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரிசை கட்டி வந்த தென்மாவட்ட பேருந்துகள்

x

விடுமுறை முடிந்து திரும்பிய தென் மாவட்ட மக்கள், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் வந்திறங்கி, அங்கிருந்து மாநகர பேருந்துகளில் சென்னைக்கு பயணித்தனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அரையாண்டு, புத்தாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வந்திறங்கினர். நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டகளில் இருந்து வந்த பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் வந்தன. அங்கிருந்து மாநகர பேருந்துகள் மூலம் சென்னையின் பிறப்பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்