10 நாட்களில் காத்திருக்கும் அடுத்த பிரம்மாண்டம் - அமைச்சர் சொன்ன தகவல்

x

சென்னையில், உலக தரத்திலான ஒலிம்பிக் அகாடமி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 117கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை, திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு, பயிற்சி மேற்கொண்ட வீர‌ர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்திய அமைச்சர் உதயநிதி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் 44 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களையும், பல்வேறு இணையதள சேவைகளையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, சென்னையில் நடத்தப்படும் ஃபார்முலா 4 போட்டிக்கு, நீதிமன்றம் உத்தரவுக்கு ஏற்ப தனியார் மூலம் ஸ்பான்சர் பெறப்படும் என்றார். மேலும், கடந்த ஆண்டு தமிழக விளையாட்டுத்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்