ரயில் பெட்டி தீ விபத்து..பலியான 9 உயிர்கள்...மதுரை விரையும் தெற்கு ரயில்வே

x

மதுரை ரயில்வே நிலையம் அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை - ரயில் பெட்டியில் உள்ளே இருந்து பொருட்களை மீட்டு விசாரணை

தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சோம்நாத் தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு

மதுரை ரயில் தீ விபத்து - ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா மதுரை விரைவு....

மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் 10 அதிகாரிகள் கொண்ட குழு விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் ரயில்வே போலீசார் சார்பில் ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர் வனிதா மதுரை விரைந்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு ஆவி மேற்கொள்வதற்காக மதுரை சென்றுள்ள வனிதா ரயில் தீ விபத்து தொடர்பாக கூறிய விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்