தலைகீழான தமிழகத்தின் வானிலை...இன்றோடு முற்றுப்புள்ளி

x

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய இடங்களிலும், தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில், லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில், லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் எனவும், கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்